Monday, 18 September 2017

கட்சித் தாவல் தடைச் சட்டம்

சுதந்திர இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் 1951ஆம் ஆண்டு முதன்முதலாக இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தற்சமயம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ற பிரிவு ஒன்று இல்லை. இந்தச் சட்டம், 1985ஆம் ஆண்டுவரை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத்திலும் பல்வேறு மாநில சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சட்டப் பேரவை உறுப்பினர்களோ பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் மிகவும் சாதாரணமாக சபை நடந்துகொண்டிருக்கும்போதே ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சித் தரப்புக்கும், எதிர்க்கட்சியில் இருந்து ஆளும்கட்சித் தரப்புக்கும் மாறிமாறி சென்ற வரலாறு பல உண்டு. தமிழகத்திலும் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திமுக உறுப்பினர் ப.உ.சண்முகம் சட்டமன்றத்தில் கட்சி மாறிய சம்பவம் நிகழ்ந்ததுண்டு. அதுபோல, புதுச்சேரி மாநிலத்திலும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அணி மாறிய நிகழ்வுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்ந்ததுண்டு.

இப்படி, அணி மாறும் உறுப்பினர்கள் பதவியைப் பறிக்க சட்டத்தில் ஏதும் இடமில்லாமல் இருந்ததால், இது ஜனநாயக நடைமுறைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருந்தது. இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு, 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 534 தொகுதிகளில் 401 தொகுதிகள் வெற்றிபெற்று ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றிருந்தார். இளம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தும்வகையில் 1985ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஷரத்துகள் 101, 102, 109 மற்றும் 190களில் உள்ள சாராம்சங்களின் அடிப்படையில் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். அதையே ஒரு சட்டமாக மாற்றினார். அதாவது, கட்சித் தாவல் சட்டம் என்று தனியாக, புதிதாக இயற்றப்படுவதற்குப் பதிலாக, இதை இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாகவே உருவாக்கி, இந்தச் சட்டத்துக்கு ஒரு முக்கியத்துவத்தையும் உருவாக்கினார். இந்த அரசியலமைப்பு சட்டமானது, 52வது சட்டத் திருத்தம் என்று அழைக்கப்படுகிறது. அதில் புதிய விஷயமென்னவென்றால், இந்த 52 வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒரு பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கும்வகையில், இந்திய அரசியலமைப்பில் 10வது சட்ட அட்டவணை ஒன்றையும் புதிதாக உருவாக்கி, இந்தச் சட்டத்தை நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் வராமல் இருக்கும்படி உருவாக்கினார். பின்பு ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த பாதுகாப்பு அம்சம் மட்டும் தவறு என ஆணையிட்டு, இந்த சட்டத் திருத்தத்தின்கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது.
இதற்கு கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று வெளிப்படையான பெயர் எதுவும் இல்லை. ஆனால் இந்த 52வது சட்டத் திருத்தமுறையையும், அதை உள்ளடக்கிய 10வது சட்ட அட்டவணையையும்தான் நாம் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்கிறோம். இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகினால், தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கமாட்டார்கள். அப்படியில்லாமல், அந்தக் கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக விலகினாலோ, அக்கட்சியின் மன்ற கொறடா ஆணையை ஏற்று, மன்றத்தில் செயல்பட மறுத்தாலோ அல்லது அக்கட்சியின் மன்ற கொறடாவின் ஆணையை ஏற்காமல், மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாமல் இருந்தாலோ, எதிர்த்துச் செயல்பட்டாலோ அந்த மன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்கீழ் மன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும். இதில் சபாநாயகர் தீர்ப்பே இறுதியானதாகும். இதில் சபாநாயகரோ, துணை சபாநாயகரோ தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடாவின் ஆணையை மன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கக் கூடாது என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால் இப்படி சபாநாயகரோ, துணை சபாநாயகரோ, கொறடா ஆணைக்கு மாறாக நடந்தால், சபையின் மொத்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்து அதை அவர்களுக்கு எதிராக நிறைவேற்றினால், சபாநாயகர்களும் இந்த சட்டத் திருத்தத்தின்கீழ் பதவியிழக்க வேண்டும்.


இதன்பிறகு, இந்தியாவில் இப்படி மன்ற உறுப்பினர்கள் தங்கள் வசதிக்கு கட்சிக்கு எதிராக வாக்களித்து, தேர்ந்தெடுத்த மக்களின் விருப்பத்துக்கு/முடிவுக்கு எதிராக தனித்தனியாக சுயேட்சையாகவும் சுயநலத்துடனும் கட்சி தாவும் நடவடிக்கைகள் வெகுவாக குறைந்துபோனது. 1997ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிஜேபி-யும் மாயாவதியும் அதாவது, உயர்சாதி கட்சியும் ஒடுக்கப்பட்ட மக்கள் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டணி அமைத்து, இருவரும் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர். இதனால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பி.ஜே.பி.,யின் கல்யாண் சிங் முதலில் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றார். ஆனால் ஒரு வருடத்துக்குள் மாயாவதி கட்சி மன்ற உறுப்பினர்களில் ஒரு பங்கு உறுப்பினர்களான 29 எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டுவரும் இந்திய அரசியலமைப்பு 10ஆவது சட்ட அட்டவணை திருத்தத்தின்கீழ் அவர்கள் உறுப்பினர் பதவியைக் காப்பாற்றி, தனது இரண்டரை ஆண்டுகாலம் ஒப்பந்தத்தை முறியடித்து, தொடர்ந்து தானே 5 ஆண்டுகாலம் ஆட்சிபுரிய, மாயாவதி கட்சியில் இருந்து முதல் 22 நபர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். அதில் ஆளுநருக்கு அளித்த பட்டியலில் 29 மன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் கூறியிருந்தனர். முதலில் வந்த 22 நபர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தனர்.
இதுகுறித்து மாயாவதி, சபாநாயகருக்கு மனு செய்ததில் அவர், கட்சித் தாவல் நடைபெறவில்லை எனக் கூற, அதை எதிர்த்து மாயாவதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்தத்தின் மீது எழுப்பப்படும் முதல் வழக்காகும். இதை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தொடர்ந்து வெகுதீர விசாரித்தது. தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் எம்.சீனிவாசன் எழுதிய தீர்ப்பு மிக முக்கியமானதாக அமைந்தது.


தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் அரசியல் நிகழ்வுகளுக்கு இந்தத் தீர்ப்பு மிக முக்கிய ஒரு பாடத்தைத் தரும்.


Friday, 15 September 2017

தமிழ் மீன் அருஞ்சொற்பொருள்/TAMIL FISH GLOSSARY



B - வரிசை
AMBLYGASTER CLUPEOIDES - கீரிமீன் சாளை
ANCHOVIES - நெத்திலி மீன்


B - வரிசை
BABY SHARK - பால் சுறா
BARBER'S KNIFE - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை
BARILLIUS GATENSIS - ஆட்கான்டி
BARRACUDA - சீலா மீன்
BLOTCHED CROAKER - கோரோவா
BROADFIN SHARK - கோர சுறா
BUTTER FISH - விறால் மீன்

C - வரிசை
CAT FISH - கெளுத்தி மீன்
CHANNA MARULIUS - அவிரி
CHITALA CHITALA - அம்புட்டன் வாழ
CIRRHINUS CIRRHOSUS - வெள்ளை அரிஞ்சான்
CLUPEA ILISHA - ஆற்றுல்லம்
COD - பன்னா மீன்
COROMANDEL FLYING FISH - கோலா
CUTTLEFISH - கனவாய் மீன்

D - வரிசை
DACTYLOPTERUS ORIENTALIS - ஆனதும்பி
DIPLOPRION BIFASCIATUM - அனுவ மீன்

E - வரிசை
EEL - விலாங்கு மீன்
ENCHELIOPHIS HOMEI - வெள்ளி அரிஞ்சான்
ETROPLUS SURATENSIS - உடுப்பாத்தி


G - வரிசை
GOLDBOND GOLD FISH - நாவர மீன்
GYMNURA POECILURA - அத்வாணி திருக்‍கை

H - வரிசை
HALIBUT - போத்தா மீன
HEMIPRISTIS ELONGATA - அடுக்குப்பல் சுறா
HIRUNDICHTHYS COROMANDELENSIS - கோலா


J - வரிசை
JELLY FISH - இழுது மீன்.

K - வரிசை
KING FISH - வஞ்சரம் மீன்

L - வரிசை
LAMIOPSIS TEMMINCKII - கோர சுறா
LEATHER SKIN - தீரா மீன்
LITTLE TUNNY - சூரை மீன்
LIZA - அவிலி, அவீலீ
LOBSTER - சிங்கி இறால்

M - வரிசை
MALABAR TREVALLY - பாரை மீன்
MENE MACULATA - அம்பட்டன்கத்தி
MONOCANTHUS MONOCEROS - அப்பைக்கொவ்வை
MONOCANTHUS SCRIPTUS - ஊமைக்கிளாத்தி
MULLET - கெண்டை மீன்

N - வரிசை
NIBEA MACULATA - கோரோவா
NOTOPTERUS KAPIRAT - அம்பட்டன்வாளை/சொட்டைவாளை
NOTOPTERUS NOTOPTERUS - அம்பட்டன் கத்தி


P - வரிசை
PARROT FISH - கிளி முக்கு மீன்
PISTANACHUS SEPHEN - அதவாழன் திருக்‍கை
PLOTOSUS CANIUS - ஆக்கணாங்கெளிறு
POMFRET - வாவல்


R - வரிசை
RASTRALLIGER KANAGURTA - அகலை
RED SNAPPER - சங்கரா மீன்
RHICODON TYPUS - அமீனீ உளுவை
RIBBON FISH - வாலை மீன்

S - வரிசை
SARDININA LONGICEPS - பேய்ச் சாலை
SARDINE - சாலை மீன்
SAW FISH - கோலா மீன்
SCOPLOPSIS TAENIOPTERUS - கும்டுல்
SEA BASS - கொடுவா மீன்
SHARK - சுறா மீன
SMELT - கெலங்கா மீன்
SPADE FISH - சீப்பு திரட்டை மீன
SQUID - ஊசிக் கணவாய்
SWORD-FISH - வாளை மீன்

T - வரிசை
TERAPON JARBUA - கீச்சான்
THRYSSA MALABARICA - அடுப்பு பொறுவா
TIGERFISH - கீச்சான்
TRIACANTHUS STRIGILIFER - கிளாத்தி/கிழாத்தி

U - வரிசை
UMBRINA MACROPTERA - ஆனைக்கற்றலை


Y - வரிசை

YELLOW TUNA - கீரை மீன்

தமிழ் பறவை அருஞ்சொற்பொருள்/TAMIL BIRD GLOSSARY


A - வரிசை
ALBATROSS - அண்டரண்டப்பறவை
ASIAN PARADISE FLYCATCHER - அரசவால் ஈப்பிடிப்பான்
ASIAN WHITE-BACKED VULTURE - மாடுபிடுங்கி
ASHY CROWNED SPARROW LARK - சாம்பல் தலை வானம்பாடி
ASHY PRINIA - சாம்பல் கதிர்குருவி


B - வரிசை
BAYA WEAVER - தூக்கனாங்குருவி
BLACK VULTURE - மலைப்போர்வை
BLACK-BELLIED TERN - கருப்பு வயிற்று ஆலா
BLUE-ROCK PIGEON - மாடப் புறா
BLYTH'S REED WARBLER - பிளித் நாணல் கதிர்குருவி
BROWN SHRIKE - பழுப்புக் கீச்சான்
BUTTON QUAIL - கருங்காடை


C - வரிசை
CATTLE EGRET - உண்ணிக்கொக்கு
CHOUGH - செவ்வலகி
CITRINE WAGTAIL - மஞ்சள் வாலாட்டி
COOT (COMMON) - நாமக் கோழிம், கரண்டம்
COPPERSMITH BARBET - செம்மார்புக் கூக்குருவான்
CURLEW - கோட்டான்

D - வரிசை
DARTER - நெடுங்கிளாத்தி
DRONGO - கரிச்சான்

E - வரிசை
EASTERN SKYLARK - சின்ன வானம்பாடி
EGYPTIAN VULTURE - பாப்பாத்திக் கழுகு
EURASIAN GOLDEN ORIOLE - மாங்குயில்
EURASIAN SPOONBILL - கரண்டிவாயன்

F - வரிசை
FISHING EAGLE - விடை ஆளி
FOREST WAGTAIL - கொடிக்கால் வாலாட்டி

G - வரிசை
GADWALL - கருவால் வாத்து
GARGANY - நீலச்சிறகு வாத்து
GLOSSY IBIS - அறிவாள் மூக்கன்
GREAT CORMORANT - பெரிய நெட்டைக்காலி
GREY HEADED FISHING EAGLE - விட ஆலா
GREY HERON - சாம்பல் நாரை
GREENISH LEAF WARBLER - பச்சைக் கதிர்குருவி
GREY PELICAN - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா
GREY WAGTAIL - சாம்பல் வாலாட்டி
GOLDFINCH - பொன்பாடி

H - வரிசை
HARRIER - பூனைப்பருந்து
HAWK - பாறு
HOATZIN - வெடிற்போத்து
HOOPOE - கொண்டலாத்தி
HORNBILL - இருவாய்க்குருவி, இருவாய்ச்சி, இருவாயன்
HUMMINGBIRD - இமிரிச்சிட்டு, ரீங்காரப்பறவை

I - வரிசை
INDIAN LITTLE GREBE - மூக்குளிப்பான்
INDIAN TREEPIE - வால் காகம்


K - வரிசை
KESTREL - கரைவணை
KITE - கலுழன், கருடன்

L - வரிசை
LESSER GOLDENBACKED WOODPECKER - பொன்முதுகு மரங்கொத்தி
LITTLE CORPORANT - சின்ன நீர்க்காகம்
LITTLE CRAKE - சின்னக் காணான்கோழி
LITTLE EGRET - சின்ன வெள்ளைக்கொக்கு
LITTLE GREBE - குளுப்பை
LITTLE-RINGED PLOVER - பட்டாணி உப்புக்கொத்தி
LOVE BIRD - அன்றில்

M - வரிசை
MACAW - ஐவண்ணக் கிளி
MAGPIE ROBIN - குண்டுக் கரிச்சான்
MOORHEN (COMMON) - தாழைக் கோழி
MUNIA - நெல்லுக்குருவி

N - வரிசை
NIGHTHAWK - இராப்பாறு
NIGHT HERON - வாக்கா
NIGHTINGALE - இராப்பாடி

O - வரிசை
OLIVE-BACKED PIPIT - காட்டு நெட்டைக்காலி
ORIENTAL WHITE IBIS - வெள்ளை அறிவாள் மூக்கன்
OSPREY - விரலடிப்பான்
OSTRICH - நெருப்புக்கோழி, தீக்கோழி

P - வரிசை
PAINTED STORK - மஞ்சள் மூக்கு நாரை
PALLID HARRIER - பூனைப் பருந்து
PARIAH KITE - பறைப் பருந்து
PASSER DOMESTICUS - வீட்டுச் சிட்டுக்குருவி
PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா, கூளைக்கடா
PENGUIN - பனிப்பாடி
PEREGRINE FALCON - பைரி
PHESANT-TAILED JACANA - நீலவால் இலைக்கோழி
PIED HARRIER - வெள்ளைப் பூனைப்பருந்து
PITTA - தோட்டக்கள்ளன்
PIPIT - நெட்டைக்காலி
PURPLE MOORHEN - நீலத் தாழைக் கோழி
PURPLE RUMPED SUNBIRD - ஊதாப் பிட்டு தேன்சிட்டு
PURPLE SUNBURD - ஊதாத் தேன்சிட்டு

Q - வரிசை
QUAIL - காடை

R - வரிசை
RED SHANK - மலைக்கோட்டான்
RED-WATTLED LAPWING - சிவப்பு மூக்கு ஆள்காட்டி
RED-WINGED BUSH-LARK - சிகப்பு இறக்கை வானம்பாடி
REEF HERON - கரைக்கொக்கு
ROLLER - கொட்டுக்கிளி
ROSY STARLING - சோலக்குருவி
RUDDY-BREASTED CRAKE - சிவப்புக் காணான்கோழி

S - வரிசை
SANDPIPER (COMMON) - உள்ளான்
SEA EAGLE - ஆலா
SHAG - கொண்டை நீர்க்காகம்
SHRIKE - கீச்சான் குருவி
SISKIN - பைது
SMALL BLUE KINGFISHER - சிறால் மீன்கொத்தி
STORK-BILLED KINGFISHER - பேரலகு மீன்கொத்தி
SPOONBILL - சப்பைச்சொண்டன்
SPOTBILLED PELICAN - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா
SPOTTED DOVE - புள்ளிப் புறா
SPOTTED MUNIA - புள்ளிச் சில்லை
SPOTTED OWLETTE - புள்ளி ஆந்தை
SWALLOW - தகைவிலான் குருவி

T - வரிசை
TAILORBIRD - தையல்சிட்டு
TEAL (COMMON) - கிளுவை
TERN (COMMON) - ஆற்றுக்குருவி
TOUCAN - பழச்சொண்டான்
TREEPIE - வாலி
TURTLE DOVE - கரும்புறா

V - வரிசை
VULTURE - பிணந்தின்னி, உவணம்

W - வரிசை
WHIMBREL - குதிரைத் தலைக் கோட்டான்
WHITE WAGTAIL - வெள்ளை வாலாட்டி
WHITE-BREASTED WATERHEN - காம்புல் கோழி
WHITE-BELLIED SEA EAGLE - ஆலா
WHITE-HEADED KITE - உவணம்
WHITE-NECKED STORK - வெண்கழுத்து நாரை
WHITE-RUMPED MUNIA - வெண்முதுகுச் சில்லை
WIDGEON - காட்டு வாத்து


Y - வரிசை
YELLOW-WATTLED LAPWING - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி



Wednesday, 25 March 2015

திருக்குறளுக்காக எட்டாம் வகுப்பு சிறுவன் உண்ணாவிரதம்! இந்த சிறுவனை பாராட்டாமல் இருக்க முடியாது !!

திருக்குறள் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, தனது பெயரையே ‘குறள்மகன்’ என்று மாற்றிக்கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை சத்தமின்றி செய்துவருகிறார் சுபாஷ் சந்திர போஸ்.
அவரது தொடர்ந்த பிரசாரத்தின் வழியில் ஜனவரி நான்காம் தேதி திருவாரூர் தொடர் வண்டி நிலையம் அருகில், காலை முதல் மாலை வரை திருக்குறள் பரப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தான் இந்த சிறுவன்
”மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை அனைவரும் தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, ‘இல்லம் தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன் என்கிறவர், திருக்குறள் விழிப்பு உணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்.
”மொழிகளில் தொன்மையான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் திருக்குறளை அனைவரும் தொடர்ந்து கற்க வேண்டும். அதற்காக, ‘இல்லம் தோறும் வள்ளுவர், உள்ளம் தோறும் குறள்’ என்ற திட்டம் தயாரித்தேன். திருவாரூர் பகுதியில் பல வீடுகளுக்குச் சென்று திருவள்ளுவர் சுவரொட்டி தந்து, திறக்குறளின் பெருமைகளைச் சொன்னேன் என்கிறவர், திருக்குறள் விழிப்பு உணர்வுக்காக சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்திருக்கிறார்.
சரி இப்பொழுது ஜனவரி நான்காம் நாளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? என கேட்க குறள்மகனோ, “இன்றிலிருந்து தொடங்கினால்தான் வள்ளுவர் பிறந்த நாளுக்குள்ளாக மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எல்லாரும் தினமும் ஒரு குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை படிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் இந்த உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம்” என்கிறார்.
உண்ணாவிரதம் இருந்த குறள்மகனை பாஜக திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா வாழ்த்தினார். மாலை ஆறு மணியளவில் மதிமுக மாவட்ட பொறுப்பில் இருக்கக்கூடிய கூடூர் சீனிவாசன் குறள் மகன் நடத்திய உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
மக்கள் திருக்குறளை படிப்பதோடு விட்டுவிடாமல் அதன் வழி நடந்தால் நாடு விரைவில் முன்னேறும் என்பது திண்ணமே.
நன்றி
த.க.தமிழ் பாரதன்

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!

நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி.

அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் என பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன்.
வெ.ராமசுப்பிரமணியன் சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழா வுக்கு தலைமையேற்க வந்திருந்தார். புதுக்கோட்டை செல்கிறோம்... இந்தப் பயணத்தில் ஒருவரைச்சந் திக்க வேண்டும் என ஆசைப்படுகிறது நீதியரசரின் தமிழ் மனசு. அவரைப் பற்றி பல மேடைகளில் பேசி இருக்கிறார். பல இடங்களில் மேற்கோள்காட்டி இருக்கிறார். பலரிடமும் வியந்து வியந்து பாராட்டி இருக்கிறார். ஆனால் அவருடன் கடிதவழித் தொடர்பு மட்டுமே. நேரடியாகச் சந்தித்ததில்லை.
பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் தேர்வு செய்வார். இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த காலகட்டத்தில் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு நிக ரான தமிழ் வார்த்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். இந்தப் பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட நீதியரசருக்கு ஆசை. தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவி யாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
காலை 8 மணி. 55-60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். நீதியரசர் அவர்கள், “ தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்த னையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடு தேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....
ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா? பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.
( அந்த 47 வார்த்தைகள்...
(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.
மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்)
“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.
“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி.
தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.
பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.
பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!
(மன்னிக்கவும் அந்த அம்மையாரின் புகைப்படம் கிடைக்கவில்லை ! புதுக்கோட்டை அருகே புதுப்பட்டி கிராமத்தை சார்ந்த நண்பர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் முடிந்தால் புகைப்படம் பிடித்து இங்கு பகிரவும்)
- பழ. அசோக்குமார் ( கூடல் நகர் )
நன்றி @ஆனந்த விகடன்

Wednesday, 18 June 2014

ஒப்பாரி பாடல்கள்

ஒப்பாரி பாடல்கள்


ஏறக்குறைய இன்றைய காலகட்டத்தில் 98 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். கிராமங்களில் வயதான ஒருவர் இறந்து விட்டால் என்றால் அவரை ஒப்பாரி பாட்ல் பாடி அவரது சாதனைகள் வேதனகளைச்சொல்லிதான் அனுப்பிவைப்பார்கள்.

மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு;கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.

ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்று ஆனால் அது இன்றல்ல. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தான் தாலட்டும், ஒப்பாரி பாடல்களும். மனிதனின் தொடக்க காலத்தில் பாடுவது தாலட்டு, அவன் வாழ்க்கை முடிந்து போகையில் பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும். தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.
நான் அறிந்தவரையில் எங்க ஊரில் பொன்னாத்தாள் என்ற ஒரு பாட்டி இருந்தார்கள் யாராவது வீட்டில் இறந்து விட்டார்கள் எனில் பொன்னாத்தாவை தான் கூப்பிடுவார்கள். வயதான வாழ்ந்து அனுபவித்த ஒருவர் இறந்து விட்டர் எனில் அங்கு ஒப்பாரி ரொம்ப பலமாக இருக்கும். அந்த வீடுகளில் ரேடியோ கட்டி ஒருநாள் முழுக்க பொன்னாத்தாள் மைக்பிடித்து ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பிக்கும். அப்படி பாடும் போது அவரின் அருமை பெருமைகள் அனைத்தும் அப்பாடல்களில் வரும். ஆனால் இன்று கால வேகத்தில் ஒப்பாரி என்னும் கிராமியபாடல்களே அழிந்து விட்டது என்றே கூறலாம்.
நான் படித்த சில ஒப்பாரி பாடல்கள்....

இறந்தவர்களின் உறவு முறை அடிப்படையில் ஆரம்பிக்கும் முதல் வரி....

என்னை ஆளவந்த ராசாவே -மனைவிஎன்னப் பெத்த சீதேவியே- மகள்என்ர மகளே- தாய்என்ர மகனே- தாய்என்ர பிறவியரே- சகோதரி நான் பெறாமகனே-பெரியதாய் அல்லது சிறியதாய்



இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் #ஒப்பாரி 


பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ 

பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதற்கான பாடல்....

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன
 


முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு
நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே



தந்தைக்கும், கணவனுக்கும் பொறுந்தக்கூடிய பாடல்....

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ
மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு. 


என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன்


மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல்...

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு 
உன்னைகட்டைக்கோ அனுப்புகிறேன்....



இறந்தவர் வீட்டுக்கு இரண்டு நாள் கழித்து துக்கம் விசாரிக்க வருபவருக்கான பாடல்...


“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு
ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்” 

இப்படி பல வகையான பாடல்கள் நம் சமூகத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற ஒப்பாரி பாடல்கள் ஆகும். ஆனால் இன்று இவைகள் அழிந்துவிட்டன என்கிற போது வருத்தப்பட வேண்டி உள்ளது...

Tuesday, 17 June 2014

பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்



வணக்கம் வலை நண்பர்களே!
இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?

முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.


Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்த பின்  task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும். 

 

க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.

En

EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும். 


டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.


பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும். 


மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.


இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

சரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா?
ரொம்ப ஈசி///
பேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான். 

சிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.
Google tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.


மேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.


குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம். 

2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.

3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்

Saturday, 14 June 2014

ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள் ......


இசையால் வசமாக இதையமுண்டோ 



1. ஷட்ஜம் (ச): ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)

2. ரிஷபம் (ரி): இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.

3. காந்தாரம் (க): காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.

4. மத்திமம் (ம): ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.

5. பஞ்சமம் (ப): ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)

6. தைவதம் (த): தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.

7. நிஷாதம் (நி) ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.

சரிகமபதநிச 

Wednesday, 11 June 2014

யானையின் தமிழ்ப்பெயர்கள்

தமிழின் பெருமைக்கு எல்லையே இல்லை !!

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றத)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி


யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!

Tuesday, 10 June 2014

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள்

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள் 



1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும்,தந்தையும்

2. வந்தால் போகாதது - புகழ், பழி

3. போனால் வராதது - மானம்,உயிர்

4. தானாக வருவது - இளமை,முதுமை

5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது -பந்தம்,பாசம்

9. அழிவை தருவது - பொறாமை,கோபம்

10. எல்லோருக்கும் சமமானது -பிறப்பு,இறப்பு

11. கடைத்தேற வழி -உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி,செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று

15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் - பேராசை

19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் - பொறாமை

21. நம்பக்கூடாதது - வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது - தவறுகள்

24. செய்ய வேண்டியது - உதவி

25. விலக்க வேண்டியது - விவாதம்

26. உயர்வுக்கு வழி - உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு