Monday 5 May 2014

ஆயகலைகள் அறுபத்து நான்கு

ஆயகலைகள் அறுபத்து நான்கு

பழங்கால தமிழர்கள் ஆயகலைகள் 64 - கையும் கற்று தேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் அவர்கள் வீரம்  மிகுந்தவர்களாக காணப்பட்டனர். அந்த 64 கலைகள் என்னென என்பதை பற்றி இங்கு காண்போம்

    1.  எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
    2.  எழுத்தாற்றல் (லிபிதம்);
    3.  கணிதம்;
    4.  மறைநூல் (வேதம்);
    5.  தொன்மம் (புராணம்);
    6.  இலக்கணம் (வியாகரணம்);
    7.  நயனூல் (நீதி சாத்திரம்);
    8.  கணியம் (சோதிட சாத்திரம்);
    9.  அறநூல் (தரும சாத்திரம்);
    10.  ஓகநூல் (யோக சாத்திரம்);
    11.  மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
    12.  நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
    13.  கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
    14.  மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
    15.  உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
    16.  மறவனப்பு (இதிகாசம்);
    17.  வனப்பு;
    18.  அணிநூல் (அலங்காரம்);
    19.  மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
    20.  நாடகம்;
    21.  நடம்;
    22.  ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
    23.  யாழ் (வீணை);
    24.  குழல்;
    25.  மதங்கம் (மிருதங்கம்);
    26.  தாளம்;
    27.  விற்பயிற்சி (அத்திரவித்தை);
    28.  பொன் நோட்டம் (கனக பரீட்சை);
    29.  தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
    30.  யானையேற்றம் (கச பரீட்சை);
    31.  குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
    32.  மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
    33.  நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
    34.  போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
    35.  மல்லம் (மல்ல யுத்தம்);
    36.  கவர்ச்சி (ஆகருடணம்);
    37.  ஓட்டுகை (உச்சாடணம்);
    38.  நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
    39.  காமநூல் (மதன சாத்திரம்);
    40.  மயக்குநூல் (மோகனம்);
    41.  வசியம் (வசீகரணம்);
    42.  இதளியம் (ரசவாதம்);
    43.  இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
    44.  பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
    45.  மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
    46.  நாடிப்பயிற்சி (தாது வாதம்);
    47.  கலுழம் (காருடம்);
    48.  இழப்பறிகை (நட்டம்);
    49.  மறைத்ததையறிதல் (முஷ்டி);
    50.  வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
    51.  வான்செலவு (ஆகாய கமனம்);
    52.  கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
    53.  தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
    54.  மாயச்செய்கை (இந்திரசாலம்);
    55.  பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
    56.  அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
    57.  நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
    58.  வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
    59.  கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
    60.  நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
    61.  விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
    62.  புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
    63.  வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
    64.  சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

                                                                                                                                  No comments:

                                                                                                                                  Post a Comment